சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
திமுக ஆட்சிக்கு 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கச் செல்கின்றனர்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. தமிழ் நாடு அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் நமது மாணவர்கள் இன்று முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்கின்றனர்.
கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 17% அதிகரித்துள்ளது. என்று கூறினார்.
மேலும், வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயண செலவை தமிழ் நாடு அரசே ஏற்கும்… திரவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது’’ என்று கூறினார்.

